திங்கள், 17 ஜனவரி, 2011

குருவாலப்பர் கோயில்









ஆங்கிலப் புத்தாண்டுக்கு நாங்கள் ஒவ்வொரு முறையும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் , குருவாலப்பர் கோவிலும் போய் வருவோம். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் எல்லோருக்கும் தெரியும். இராஜ இராஜ சோழரின் மகன் இராஜேந்திர சோழர் கட்டியது. தன் தந்தை கட்டிய, காலத்தால் அழியாத புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் போலக் கட்ட வேண்டும் என்று ஆசைப் பட்டு ஏறக்குறைய அதேமாதிரி கட்டியது.முதன் முதலில் நாங்கள் போகும் போது கோபுரத்தின் மேல் அடுக்கு எல்லாம் பார்த்து இருக்கிறோம் இப்போது அங்கெல்லாம் மக்களை ஏறவிடுவது இல்லை. இந்த முறை அங்கு சுற்றுலாத் துறையினரும் சிறப்பான விழா ஒன்றை நடத்தினர்.இந்தக்கோயிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் நிறைய வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று முதலில் வழக்கம் போல் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் போய் சேர்ந்த போது பாதையில் ஒரு பஸ் எங்கள் காரை வழிமறித்து நின்றது. நீங்கள் பின்னால் போங்கள் என்று சொன்னார். பஸ்ஸுக்காக வழி விட்டு ஒதுங்கியதில் ,அங்கு முள் இருந்து இருக்கும் போல. டயர் பஞ்சர் ஆகிவிட்டது. என்ன இது இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தாலும் கோவில் வாசலில் தானே நின்றது, சாமி தரிசனம் முடிந்து வந்து பார்த்துக்கொள்ளலாம் என கோவிலுக்குப் போய் விட்டோம். நன்கு தரிசனம் செய்து குடும்ப நலன், நாட்டு நலனுக்காக வேண்டி வந்தோம்.

வெளியில் வந்தவுடன் ஸ்டெப்னி மாற்ற வேண்டுமே என்ற கவலைபிடித்துக் கொண்டது. என் கணவருக்கு டயர் மாற்றத்தெரிந்தாலும் பக்கத்தில் கார் மெக்கானிக் கடை இருக்கிறதா என கோவில் அருகிலிருந்த ஒட்டலில் கேட்டால் ,அவர் கூட்டு ரோட்டுக்குப் போக வேண்டும் என்று சொல்லி விட்டார். குருவாலப்பர் கோயில் பெருமாளை சேவிக்க வேண்டுமே நேரம் ஆகி விட்டால் நடை சார்ர்த்தி விடுவார்களே! என்ற கவலையில் பெருமாளை வேண்டிக்கொண்டு எதற்கும் அருகில் இருந்த வேன் டிரைவரைக் கேளுங்கள் அவர் முடியாது என்றால் நீங்களே டயர் மாற்றுங்கள் என்று சொன்னேன். என் கணவரும் சரி என்று போய் கேட்க அவர் உடனே சம்மதித்து நொடியில் மாற்றிக் கொடுத்தார். பணம் கொடுத்தால் வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். இன்று நான் உங்களுக்கு உதவி செய்தால் எனக்கு யாராவது வந்து உதவி செய்வார்கள் என்றார். எங்கள் திருப்திக்கு பிஸ்கட் பாக்கெட்டாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டபின் எடுத்துக் கொண்டார். பின் தன் விசிட்டிங் கார்டு கொடுத்தார். பார்த்தால் பாலாஜி டிராவல்ஸ்” என்று போட்டு இருந்தது. குருவாலப்பர் பெருமாளே வந்து உதவி செயதது போல் இருந்தது. அவர் பேர் சுந்தர். கதிராமங்கலமாம் ஊர் .வண்டி தேவைப் பட்டால் சொல்லுங்கள் என்றார். உதவிக்கு கூப்பிட்ட போது, அதைவிட என்ன சார் வருகிறேன் என்று வந்தாரே அந்த உதவி செய்யும் பெரிய மனதைப் பாராட்ட வேண்டும்.

அவருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு குருவாலப்பர் கோவில் சென்றோம். கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் பெருமாளைச் சேவித்தபடி இருக்கிறார். அந்த கோவிலில் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கும். அழகாய் அதில் நிறைய தேன் கூடுகள் இருக்கும். கோவில் திருப்பணி ஆரம்பித்தவுடன் மரம் பாதியாய்க் குறைக்கப் பட்டுவிட்டது மனதுக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது.ஆலமரத்திற்கு எதிரில் அல்லி மலர்கள் பூத்த புஷ்கரணி உள்ளது. இத்தலப் பெருமாள், தாயாரிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அதை நிறைவேற்றித் தருவார் என்றார் பட்டர்.

நாங்கள் அங்கு 5,6 வருடமாய் சென்று தரிசித்து வருகிறோம்.அந்த கோவிலுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்த கோவிலின் விபரம் கொடுத்துள்ளேன். முடிந்த போது தரிசனம் செய்து வாருங்கள்.கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் வந்தாலே நல்லாஇருக்கும் என்றார் பட்டர். வெளியூர் பக்தர் ஒருவர் தீபத்திற்கு எண்ணெய், நெய் எல்லாம் நிறைய பட்டரிடம் கொடுத்தார். உள்ளூர் பக்தர் ஒருவர் குடும்பத்துடன் வந்து இருந்தார். கோவிலை விட்டு வரும் போது வேனில் சென்னையிலிருந்து ஒரு வைணவ குடும்பம் வந்தார்கள் பெருமாளைச் சேவிக்க.

குருவாலப்பர் கோயில்:


குருகை காவலரப்பர் திருக்கோயில் என்பது மருவி, குருவாலப்பர் கோயில் என்று தற்போது வழங்கப்படுகிறது குருகை காவலப்பர், வைணவ ஆச்சாரியரான நாதமுனிகளின் சீடர்களில் ஒருவராவார். இவர் நாதமுனிகளிடம் இருந்து யோகசாஸ்திரத்தைக் கற்றுக்கொண்டவர். நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் அமைந்துள்ள பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதியில் குருகைக்காவலப்பர் அருளிய தனியன் உள்ளது.
அப்பாடல்:

//சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு-ஓராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே
உரைக்கண்டாய் நெஞ்சே உகந்து.//

இராஜேந்திரசோழன் வடநாட்டிலிருந்த நாதமுனிகளைத் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து கங்கைகொண்டசோழபுரம் என்னும் தலைநகரை நிருமாணித்தான்.அவரைத் தனது ராஜ ஆலோசகராகக் கொண்டான். இராஜேந்திரசோழ்னின் மனைவியின் முயற்சியால் இத்திருக்கோயில் உருவாயிற்று என்பார்கள். குருவாலப்பர்கோயில் என்னும் ஊர் தனது ஆட்சிக்குள் 85 சிற்றூர் மற்றும் ஜமீன்களைக் கொண்டு விளங்கியிருக்கிறது. கங்கைகொண்டசோழபுரம் என்ற ஊரும் இதனுள் அடக்கம்.

திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள

இறைவன் பெயர் : அருள்மிகு வீரநாராயணப் பெருமாள்;
இறைவியின் பெயர்: அருள்மிகு மரகதவல்லித்தாயார்
மகாலட்சுமி அவதாரம் பண்ணிப் பெருமாளைத் தவம் செய்து
விவாகம் பண்ணிய தலம்.

நின்ற திருக்கோலம்
கிழக்கே திருமுகமண்டலம்
பார்க்கவ சேத்திரம்
மரகதவல்லித்தாயார்,இராமர்,ஆண்டாள்,ஆழ்வார்கள்,விஷ்வக்சேனர்
ஆகியோருக்குச் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.
உற்சவமூர்த்தி-துவாரகாநாதர்
நாதமுனிகளுக்குக் கிருஷ்ணனாக சேவைசாதித்த தலம்
இங்கு வந்து வணங்கியவர்களின் கொடிய பாவங்களும் தீரும் என்கிறார்கள்

வைகாசி விசாகத்தன்று தேர்த்திருவிழா நடைபெற்று வந்திருக்கிறது. நீண்டகாலமாக கவனிப்பாரின்றி இருந்த இத்திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.நீண்டகாலம் இங்கு முன்பு பணியாற்றிய முதுபெரும்பட்டாச்சாரியாருக்குப் பிறகு தற்போது திருவரங்கத்தில் இருந்து வந்துள்ள திருமிகு.கண்ணன் பட்டாச்சாரியார் பொறுப்பேற்று கோயில் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறார்.நாங்கள் முதன்முதலில் இங்கு சென்றபோது முன்பிருந்த பட்டாச்சாரியார் அடிக்கடி இத்தலத்துக்கு வாருங்கள் என்று அன்புடன் கூறினார், அதில் இருந்து ஒவ்வோராண்டும் போய் வருகிறோம்.

இப்போதுள்ள தொடர்புகொள்ள:

கண்ணன் பட்டாச்சார்யார்-செல்:9965342123
----------


இருப்பிடம்:

இத்தலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கே 2 கி.மீ தூரத்தில் உள்ளது.
இத் தலம் திருச்சியிலிருந்து-91 கி.மீ தூரத்திலும்
கும்பகோணத்திலிருந்து 46கி.மீ தூரத்திலும்
அரியலூரிலிருந்து38கி.மீ தூரத்திலும் உள்ளது

முகவரி:

அருள்மிகு குருவாலப்பர் திருக்கோயில்,
ஜெயம்கொண்டம் தாலுக்கா
அரியலூர் மாவட்டம்.
பின்கோடு-612901

25 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு. நம்பினார் கெடுவதில்லை. உங்களுக்கு உதவ அந்த பாலாஜி வந்தார் பாருங்களேன்...

    பகிர்வுக்கு நன்றிம்மா. அடுத்த முறை திருச்சி செல்லும்போது செல்ல முயல்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. விபரங்களுக்கு நன்றி அம்மா. படங்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. கூட்டமில்லா கோயில்களின் அழகே தனி தான்.
    ஆனால் வந்துபோக ஆள் இல்லாமல் அது வீணாய்போவது சோகம்..

    சீரமைப்பு நடைபெறுவது நல்லவிசயம்.

    பதிலளிநீக்கு
  4. கோவிலைப் பற்றிய விவரங்களுக்கு நன்றி அம்மா. படங்களும் நன்றாக இருந்தது. அடுத்த முறை ஊருக்கு செல்லும் போது செல்ல முயச்சிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. படங்களும் விவரங்களும் அனுபவப் பகிர்வும் மிக அருமை கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  6. விவரமாக ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்லி அழகாக படிப்போருக்கு பயன்படுகிற மாதிரி எழுதியிருக்கிறீர்கள்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நன்றி வெங்கட்

    நன்றி புவனேஸ்வரி

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி ஆதி

    நன்றி ராமலக்ஷ்மி

    நன்றி ராம்ஜி யாஹீ

    நன்றி சித்ரா

    நன்றி ஜீவி சார்

    உங்கள் எல்லோர் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. என்ன ஒரு அமைதியான சூழல்!.
    முத்துலெட்சுமி அவர்கள் சொல்வது போல் 'வீணாய்' போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    குருவாலப்பரின் அழகிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க கபீரன்பன்,கோவில் வீணாய் போகமல் இருக்க இறைவன் திருவுள்ளம் படி அன்பர்கள் உதவியால் திருப்பணிகள் நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. நானும் கங்கை கொண்ட சோழபுரம் போயிருக்கிறேன்...அப்படியே ஸ்ரீ முஷ்ணம் சென்று விட்டேன். இங்கு போனதில்லை.அடுத்த முறை செல்கிறேன்!

    பதிலளிநீக்கு
  11. வாங்க ராமமூர்த்தி, அடுத்தமுறை செல்லும் போது சென்று வாருங்கள். நீங்கள் போகும் போது திருப்பணி முடிந்த இன்னும் அழகான கோவிலைப் பார்க்கலாம்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. கோபுரத்தில் மரங்கள் முனைத்திருப்பதைப் பார்க்க கவலையாக இருந்தது.

    திருப்பணிகள் நடப்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  13. மாதேவி ,எனக்கும் அப்படித்தான் மரங்கள் முளைத்திருப்பதைப் பார்த்து மிகவும் கஷ்டமாய் இருந்தது.

    திருப்பணி வேகமாய் நடக்கிறது.
    அடுத்தமுறை போகும் போது அழகான கோபுரத்தைப் பார்க்கலாம்.

    வருகைக்கு நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  14. கங்கைக் கொண்ட சோழபுரம் எனக்குப் பிடித்த கோவில்களில் ஒன்று . இப்பொழுது அதிகம் பேர் வருகின்றார்கள் என்றத் தகவல் தேன்போல் விழுகிறது காதில்.

    குருவாலப்பரின் அழகிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி.இது வரைக் கேள்விப்படாத கோவில். நன்றி

    பதிலளிநீக்கு
  15. கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருக்கிறேன். குருவாலப்பர் கோயில் தகவல் புதிது. நன்றி,

    பதிலளிநீக்கு
  16. கங்கைக் கொண்ட சோழபுரம் கோவில் எங்கள் குடும்பத்தார்களுக்கும் ரொம்ப பிடிக்கும் எல்கே.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எல்கே.

    பதிலளிநீக்கு
  17. சிவகுமாரன்,முடிந்தபோது போய் வாருங்கள் குருவாலப்பர் கோவில்.
    அமைதியை அனுபவிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  18. சிவகுமாரன்,முடிந்தபோது போய் வாருங்கள் குருவாலப்பர் கோவில்.
    அமைதியை அனுபவிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  19. சிவகுமாரன்,முடிந்தபோது போய் வாருங்கள் குருவாலப்பர் கோவில்.
    அமைதியை அனுபவிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  20. பேயாழ்வார் தனியனைத் தேடும்போது
    உங்கள் வலைப்பூ கண்ணில் பட்டது;
    மிக அரிய தகவல். நன்றி அம்மா.
    அடுத்த முறை கட்டாயம் சேவித்து வர முயல்வேன்


    தேவ்

    பதிலளிநீக்கு
  21. தேவராஜன் உங்கள் வருகைக்கு நன்றி.

    அவசியம் குருவாலப்பரை தரிசித்து வாருங்கள். வேண்டும் நலம் அருள்வார்.

    பதிலளிநீக்கு
  22. காட்டுமன்னார் கோயில் பெருமாள்,தாயார் பெயர்களும் இக்கோயிலின் கடவுட்பெயர்களும் ஒன்றே.காரணம் ஸ்ரீமன் நாதமுனிகள் பிறந்த தலம்( அவதாரம்) காட்டுமன்னார் கோயில் அவருடைய மாணவர் குருகைக்காவலப்பர் பெயரால் அமைந்ததா? அல்லது பெருமாள் பெயரே அதுதானா என்பதை நாம் ஆய்வு செய்யவேண்டும்.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ச. இரமேஷ், வாழ்க வளமுடன்
      உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி.
      எனக்கு தெரிந்த விவரங்களை கொடுத்தேன்.

      நீக்கு